சங்கரன்கோவில் (ஆங்கிலம்:Sankarankovil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளதிருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகராட்சியாகும் . சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது.108 சக்தி தலங்களில் ஒன்று.சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70, 574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருவிழாக்கள்
1.சித்திரை பிரமோட்சவம் ( 10 நாட்கள் ) ஒவ்வொரு ஏப்ரல்.
2.ஆடி தபசு திருவிழா ( 12 நாட்கள் ) ஆகஸ்ட்.
3.ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா ( 10 நாட்கள் ) அக்டோபர்.
4.தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ( ஒவ்வொரு பிப்ரவரி ).
3.ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா ( 10 நாட்கள் ) அக்டோபர்.
4.தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ( ஒவ்வொரு பிப்ரவரி ).
வட்டார போக்குவரத்து நிலையம்
சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையம் 2013ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண் : த.நா - 79 (TN - 79)
நகராட்சி
சங்கரன்கோவில் நகராட்சியானது தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும் மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் ஆவர். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேறு எந்த நகராட்சிக்கும் கிட்டாத இவ்விருது சங்கரன்கோவில் நகராட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவிலின் பிரபலங்கள்
- புகழ்பெற்ற அரசியல்வாதி - வைகோ (மதிமுக கட்சியைத் தொடங்கியவர்
- புகழ்பெற்ற அரசியல்வாதி - சொ. கருப்பசாமி (அதிமுக அரசின் அமைச்சர் - அக்.22 2011 வரை) தற்சமயம் இறந்துவிட்டார்
- புகழ்பெற்ற அரசியல்வாதி - ச. தங்கவேலு - திமுக
- புகழ்பெற்ற அரசியல்வாதி - ச. முத்துசெல்வி - அதிமுக
- புகழ்பெற்ற நடிகர் - விவேக்
- புகழ்பெற்ற நடிகர் - எஸ். ஜே. சூர்யா
- புகழ்பெற்ற எழுத்தாளர் - தேவநேயப் பாவாணர்
சிறப்புகள்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா
- அதிவேகமாக வளரும் நகரம், சங்கரன்கோவில்
- சங்கரன்கோவில் இரயில் நிலையம் (தாலுகாவில் வேறு எங்கும் இல்லை)
- சங்கரன்கோவில் பிரியாணி
- மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும் (தென்காசிக்கு அடுத்தபடியாக)
- மாவட்டத்தில் இரண்டாவது நகைக்கடை அதிகம் உள்ள நகரம் (திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக)
சந்தை
சங்கரன்கோவிலில் இரண்டு சந்தைகள் உள்ளன. அதில் தலையாயது சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும் உள்ளது. மற்றொரு சந்தை உழவர் சந்தை ஆகும். மெயின் சந்தையில் தலா 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06 மணி முதல் 10.30 மணி வரை. உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ளது.
வங்கிகள்
- பாரத ஸ்டேட் பாங்க்
- கரூர் வைஸ்யா பாங்க்
- இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
- ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
- பாண்டியன் கிராம பாங்க்
- கனரா பாங்க்
- ஐடிபிஐ பாங்க்
- ஆந்திரா பாங்க்
- கார்ப்பரேஷன் பாங்க்
- இந்தியன் பாங்க்
- தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்க்
- சிட்டி யூனியன் பாங்க்
- கும்பகோணம் பரஸ்பர நிதி பி.லிட்
- போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட்
விரைவில் திறக்கப்படும் வங்கிகள்
- கர்நாடகா பாங்க்
- ஐசிஐசிஐ பாங்க்
- கோடக் மகேந்திரா பாங்க்
- பாங்க் ஆப் பரோடா
- லட்சுமி விலாஸ் பாங்க்
இரயில் நிலையம்
சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு பயணிகள் இரயில் வந்து செல்லும். அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இரயில் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும்.
புதிய இரயில் பாதை
- சங்கரன்கோவில் முதல் திருநெல்வேலி வரை
- சங்கரன்கோவில் முதல் கோயம்புத்தூர் வரை
- சங்கரன்கோவில் முதல் ஈரோடு வரை
- சங்கரன்கோவில் முதல் சென்னை வரை (மற்றுமொரு பாதை)
கல்வி நிறுவனங்கள்
- ஏ.வி.கே இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்
- ஏ.வி.கே மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- வேல்ஸ் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்
- ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்
- சிவா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- இராயல் சிட்டி மார்டன் இங்கிலிஷ் பள்ளி, சங்கரன்கோவில்
- இராமச்சந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- நகராட்சி (முனிசிபல்) பள்ளி (மொத்தம் - 15 +)
- செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- 36 கிராம சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- 24 மனை தெலுங்கு செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- சி.நா.ராமசாமி (எஸ்.என்.ஆர்) மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- செவென்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி , சங்கரன்கோவில்
- அன்னை தெரசா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- ஜெய மாதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- சங்கரநாராயணா பிளே பள்ளி, சங்கரன்கோவில்
- சங்கரநாராயணர் ஆரம்ப பாடசாலை, சங்கரன்கோவில்
- கோமதி சங்கர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
பேருந்து நிலையம்
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : அண்ணா பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம். தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து வழித்தடம்
சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆரியங்காவு மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாடு SETC அதிவிரைவு பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கொடைக்கானல், மூணாறு, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
No comments:
Post a Comment