Friday, August 28, 2015
Thursday, August 27, 2015
ஓணம் 2015
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. "அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு. ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். மகாபலி மன்னனும் வாமனனும் ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னாக பிறந்து சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தான். மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் எந்த துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன் மகாபலியின் அரண்மனைக்குச் சென்று தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம்தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன் குரு சொன்னதை கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான். அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். அப்படி தன் மக்களை காண மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவே மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். ஓண சத்ய விருந்து ஓண சத்ய எனப்படும் ஓணவிருந்தில் பரிமாறப்படும் பலகார வகைகளை கேட்டாலே வயிறு நிறைந்து விடும். கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கரி ஆகியவற்றை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்ணுவார்கள். பின்னர் சாம்பார் சேர்த்து உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசாத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். பின் புளுசேரி கூட்டி, இன்னொரு சுவை, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறு நிறைந்துவிடும். கும்மி கொட்டி விளையாட்டு விருந்துண்ட பின்பு பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு கோலத்தை சுற்றி கும்மி கொட்டுவர். பின்னர் வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடுகின்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு மீண்டும் பாதள லோகம் செல்கின்றார் என்பது புராணகதை. புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. மலையாள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இது கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும்
Wednesday, July 29, 2015
சங்கரன்கோவில்
மக்கள் வகைப்பாடு
திருவிழாக்கள்
3.ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா ( 10 நாட்கள் ) அக்டோபர்.
4.தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ( ஒவ்வொரு பிப்ரவரி ).
வட்டார போக்குவரத்து நிலையம்
நகராட்சி
சங்கரன்கோவிலின் பிரபலங்கள்
- புகழ்பெற்ற அரசியல்வாதி - வைகோ (மதிமுக கட்சியைத் தொடங்கியவர்
- புகழ்பெற்ற அரசியல்வாதி - சொ. கருப்பசாமி (அதிமுக அரசின் அமைச்சர் - அக்.22 2011 வரை) தற்சமயம் இறந்துவிட்டார்
- புகழ்பெற்ற அரசியல்வாதி - ச. தங்கவேலு - திமுக
- புகழ்பெற்ற அரசியல்வாதி - ச. முத்துசெல்வி - அதிமுக
- புகழ்பெற்ற நடிகர் - விவேக்
- புகழ்பெற்ற நடிகர் - எஸ். ஜே. சூர்யா
- புகழ்பெற்ற எழுத்தாளர் - தேவநேயப் பாவாணர்
சிறப்புகள்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா
- அதிவேகமாக வளரும் நகரம், சங்கரன்கோவில்
- சங்கரன்கோவில் இரயில் நிலையம் (தாலுகாவில் வேறு எங்கும் இல்லை)
- சங்கரன்கோவில் பிரியாணி
- மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும் (தென்காசிக்கு அடுத்தபடியாக)
- மாவட்டத்தில் இரண்டாவது நகைக்கடை அதிகம் உள்ள நகரம் (திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக)
சந்தை
வங்கிகள்
- பாரத ஸ்டேட் பாங்க்
- கரூர் வைஸ்யா பாங்க்
- இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
- ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
- பாண்டியன் கிராம பாங்க்
- கனரா பாங்க்
- ஐடிபிஐ பாங்க்
- ஆந்திரா பாங்க்
- கார்ப்பரேஷன் பாங்க்
- இந்தியன் பாங்க்
- தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்க்
- சிட்டி யூனியன் பாங்க்
- கும்பகோணம் பரஸ்பர நிதி பி.லிட்
- போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட்
விரைவில் திறக்கப்படும் வங்கிகள்
- கர்நாடகா பாங்க்
- ஐசிஐசிஐ பாங்க்
- கோடக் மகேந்திரா பாங்க்
- பாங்க் ஆப் பரோடா
- லட்சுமி விலாஸ் பாங்க்
இரயில் நிலையம்
புதிய இரயில் பாதை
- சங்கரன்கோவில் முதல் திருநெல்வேலி வரை
- சங்கரன்கோவில் முதல் கோயம்புத்தூர் வரை
- சங்கரன்கோவில் முதல் ஈரோடு வரை
- சங்கரன்கோவில் முதல் சென்னை வரை (மற்றுமொரு பாதை)
கல்வி நிறுவனங்கள்
- ஏ.வி.கே இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்
- ஏ.வி.கே மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- வேல்ஸ் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்
- ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்
- ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்
- சிவா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- இராயல் சிட்டி மார்டன் இங்கிலிஷ் பள்ளி, சங்கரன்கோவில்
- இராமச்சந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- நகராட்சி (முனிசிபல்) பள்ளி (மொத்தம் - 15 +)
- செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- 36 கிராம சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- 24 மனை தெலுங்கு செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- சி.நா.ராமசாமி (எஸ்.என்.ஆர்) மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
- செவென்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி , சங்கரன்கோவில்
- அன்னை தெரசா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- ஜெய மாதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
- சங்கரநாராயணா பிளே பள்ளி, சங்கரன்கோவில்
- சங்கரநாராயணர் ஆரம்ப பாடசாலை, சங்கரன்கோவில்
- கோமதி சங்கர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்
பேருந்து நிலையம்
பேருந்து வழித்தடம்
கோமதி அம்மன்

மரபு வழி வரலாறு
காவற் பறையன்[தொகு]
உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
கோயிலும், அதன் பகுதிகளும்
ஆடித் தபசு
பாம்புப் புற்று
எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )
ஆடித்தபசு 2015
Sankarankovil Sri Sankaralingaswami (Sankara Narayanar) Temple Ther Thiruvizha Live on 28-07-2015
In tamilnadu, Sri Sankaranarayana Temple is one of the famous shiva temple located in Sankarankovil, Tirunelveli district. Every year on aadi month uthradam natchatram Aadi Thapasu Festival celebrated in Sankaranarayana Swamy Temple. In Sankaranarayana Swamy Temple Famous Aadi Thapasu Festival was started on July 20, 2015 and several peoples were participated in the event. As apart of this festival, Ther Thiruvizha, Car festival, chariot festival will be happened on July 28, 2015. On July 30, 2015 – swamy will be shown to ambal as Sri Sankareswarar, Sri Sankara Narayanar. The main goddess of the temple are Sri Sankareswarar, Sri Gomathi Amman and Sri Sankara Narayanar. The car festival will be live telecast on some of the local television channels in Tirunelveli. For more news updates on SankaraNarayanar Temple Ther Thiruvizha explore to Jaya TV, Jaya Plus, Sun News, Thanthi TV, Polimer News, Puthiya Thalaimurai TV, Raj News, News7 Tamil. For video news updates explore the official youtube channels
Thursday, June 11, 2015
அங்கிகாரம்
அங்கீகாரம்
நிகழ்வு 1 : ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்
உரையாற்றிக் கொண்டிருந்தார்...
அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல
எல்லோரும் கை தட்டினாங்க.
ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல.
இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட,
என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்...
அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது,
நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்..
அப்படின்னு சொன்னார்.
அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..
நிகழ்வு 2: பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை
விளையாடிகிட்டு இருந்துச்சு...
குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து
மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக்
கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு
தன் குழந்தையைக் கூப்பிட்டு தங்கம்
ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க,
குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு...
சொல்லுன்னு சொன்னதும், குழந்தை
ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு.
அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க...
அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு.
அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு
ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு
நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க..
அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார்.
அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட
சொல்ல மாட்டேங்குது..
நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க..
அதுக்கு அவர் சொன்னார்
இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே..
அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...
குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்...
குழந்தை ஒன்னு சொல்லுச்சு,
அப்போ ஆசிரியர் ம்ம்ம்..
அப்படினார்.
குழந்தை ரெண்டு சொல்லுச்சு,
ஆசிரியர் ம்ம்ம் அப்படின்னார்.
குழந்தை மூணு சொல்லுச்சு,
ஆசிரியர் ம்ம்ம்.. அப்படின்னார்..
குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு...
அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு...
அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு
வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்...
ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்ம்...
அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்...
இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும்.
மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே.
அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம்,
அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.
ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கேதன் பேச்சுக்கான
அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு,
அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம்
அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது...
எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்,
ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...